Monday 21 September 2015



நான்...........

==================
.
சாதி ஒழிப்பு களத்தில் உயிர்நீத்த களப்போராளிகளை நினைவெத்தவாறு பேசுகின்றேன்...........

தமிழனென்ற பேரினம் இவ்வாறு வறலாறு அழிந்து
வகையற்று வாழ்வதற்கு காரணம் சாதியென்பதுதான் என்று முழுதும் தெரிந்தும்கூட அதனை ஒழிக்க முன்வராமல், வெறுமெனே தமிழ் தமிழ் தமிழென்று கூப்பாடுபோடும் கூமுட்டைகளுக்கு மத்தியில்,அடிபட்ட இனத்தில் பிறந்து சாப்பாட்டிற்குகூட வழியில்லாத மாடுமேய்க்கும் தகப்பனுக்கு பிறந்து, சாதி ஒழிப்பையும் தாண்டி பல்வேறு எதிர்ப்புகளையும் இருட்டடிப்புகளையும் எதிகொண்டு தமிழ்தேசிய போராட்ட களத்தில் தன் வாழ்வு தொலைத்து நின்றுகொண்டிருக்கின்ற எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் போர்படையில் ஒருவனாகவே.............வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்...............


அம்பேத்கர் துதிப்போம்...........



ஆயிரமாயிர ஆண்டுகளாய்
அடிமை யாக்கினாரை=அண்ணல்
அதிரச் செய்தார்...........................

விழுகிறவீழ்கிற ஆடுகளாய்
மடமை செய்தோரை=அண்ணல்
மிரளச் செய்தார்..................................

அதிரடி படைதிரட்டி
அறிவாயுத நிதிபுரட்டி=நம்
அடிமைத்தன மறுத்தார்....................

சிதையுண்ட கல்கூட்டி
சிற்பமாய் நிலைநாட்ட=அவர்
சிந்தனை யுளியெடுத்தார்...............

இருட்டில் கிடந்தநம்மை
இணையற்ற மனிதராக்க=அவர்
இந்திய சட்டம்தந்தார்...............

இனிநாங்கள் ஆடல்ல
இணையில்லா சிங்கமென்று=அவர்
இராணுவ மொழிதந்தார்...................

கொத்தடிமை பிறப்பென்று
கொக்கரித்த கூட்டங்களை=அவர்
கோயிலுக்குள் நுழைந்தடித்தார்...............

இந்துமத கோரங்களை
இயலாதோர் பொய்களென்று=அவர்
இடுகாட்டில் சுட்டெரித்தார்.....................

இனியெப்போதும் பிறப்பதில்லை
இவர்போல ஓரறிஞ்சன்=நாம்
இவர்வழி பயணிப்போம்.................

உலகுள்ளவரை மறைவதில்லை
உத்தமர்தம் அறிவாற்றல்=நாம்
உள்ளமேற்று துதிப்போம்................



இவண்
சடையன் பெயரன்
சிங்கப்பூரிலிருந்து........

No comments:

Post a Comment

சடையன் பெயர்