Sunday 20 September 2015




பிறந்தநாள் வாழ்த்து கவிதை
சடையன் பெயரன்.
இராசேந்திரப்பட்டிணம்.


================================
பிறப்பு = 1879 - செப்டம்பர் = 17
இறப்பு = 1973-திசம்பர் = 24
..

@

@
ஈரோட்டு பெருங்கிழவன்
ஈன்றுபோட்ட பகுத்தறிவு
இருமாப்பாய் படருதடா – தோழா
இமயம்போல் வளருதடா............................
.
.
பாம்பாட்டி வித்தைகளும்
பழம்கொடுமை நத்தைகளும்
பற்றாமல் அழியுதடா – தோழா
பார்ப்பனியம் ஒழியுதடா..........................
.
.
சூத்திர மடமைகளும்
சூலத்து சூழ்ச்சிகளும்
சுக்குநூறாய் உடையுதடா – தோழா
சுடுநெருப்பில் வேகுதடா......................
.
.
சாதிய அடுக்குகளும்
சமயத்தார் துடுக்குகளும்
சந்தி சிரிக்குதடா – தோழா
சாஸ்த்திரம் வெளுக்குதடா..................
.
.
ஈவேரா இல்லாட்டி
ஈஎறும்பாய் இருந்திருப்போம்
இழிவு தொலையுதடா – தோழா
இருட்டு துலங்குதடா.................
.
.
இந்த
தாடிகிழவன் மட்டும்
தமிழ்நாட்டில் பிறக்கலையேல்
தமிழர்கள் ஏதடா – தோழா
தலைவர்கள் ஏதடா..........................
.
.
@
@
.
தோழா
பெரியார் ஒரு
பெருநெருப்பு....................
.
.
அது
கொடுமைகளை கொளுத்தும்.............
மடைமைகளை நொருக்கும்..................
மனிதத்தை வளர்க்கும்...............................
.
.
தோழா
பெரியார் ஒரு
பெரும் புயல்....................
.
.
அது
சூத்திரனென்றால் அடிக்கும்........
சூழ்ச்சியைகண்டால் வெடிக்கும்...............
சுயமரியாதையை வளர்க்கும்...........
.
.
தோழா
பெரியார் ஒரு
காட்டாற்று வெள்ளம்....................
.
.
அது
கரையை கடக்கும்............
கறையை துடைக்கும்....................
கடைசியை தேற்றும்......................
.
.
தோழா
பெரியார் ஒரு
பகுத்தறிவு ஆயுதம்....................
.
.
அது
மனுவினை வெட்டும்............
அனுவினை முட்டும்..............
அறிவியலாய் சொட்டும்....................
@
@
.
.
தோழா
சமயத்தைச் சொல்லி
சாதியைச்சொல்லி
சாக்கடையில் திளைத்த-இந்த
சமூகத்தை
சரிசமபடுத்தவந்த
சரித்திர நாயகன்
தந்தை பெரியார்.........................................
.
.
தோழா
புராணத்தைச் சொல்லி
புளுகுகளைச் சொல்லி
புத்தியற்று கிடந்த-இந்த
பூமியின் புதல்வர்களை
புதுகப்பிக்கவந்த
புதியபுத்தன்
தந்தை பெரியார்..................................
.
.
தோழா
கடவுளைச் சொல்லி
கற்பனையைச் சொல்லி
கதியற்று போன-இந்த
கருப்பு திராவிடர்களை
கரைசேர்க்கவந்த
கடைசி ஆயுதம்
தந்தை பெரியார்........................
.
.
தோழா
அடிமையென்று சொல்லி
அதர்மமென்று சொல்லி
அர்த்தம்மற்று ஆன-இந்த
அடிதட்டு மக்களை
அரியனையேற்றவந்த
அரிதான சூரியன்
தந்தை பெரியார்.................................
@
@
தோழா
தமிழின உணர்வை
தன்மான திமிரை
ஊட்டி ஊட்டியே
உன்னை
உலகுக்குச் சொன்னவன்
தந்தை பெரியார்...............................
.
.
தோழா
பெண்ணின உரிமையை
பெயருக்கு பேசாமல்
பார்ப்பணிய குடிமிகள்
பயந்து பயந்து
பதுங்குகின்ற அளவுக்கு
படைகட்டி போரிட்டவன்
தந்தை பெரியார்.............................
@
@
ஆம்
இந்த
கருஞ்சட்டைப் படைகள்
ஓர்நாள்
கரையை  கடக்கும்...........................
தடையை நொருக்கும்.....................
என்றுச் சொல்லி
பெரியார் 
பிறந்தநாள் வாழ்த்துக்களை
உங்களுக்கு
தெரிவித்து விடைபெறுகின்றேன்
நன்றி
வணக்கம்...
@
@
























No comments:

Post a Comment

சடையன் பெயர்