Saturday 12 September 2015

தந்தை பெரியார் அவர்களுக்கு 

பிறந்தநாள் வாழ்த்து கவிதை
============================================செப்டம்பர் = 17
ஈரோட்டு பெருங்கிழவன்
ஈன்றுபோட்ட பகுத்தறிவு
இருமாப்பாய் படருதடா – தம்பி
இமயம்போல் வளருதடா............................
.
.
பாம்பாட்டி வித்தைகளும்
பழம்கொடுமை நத்தைகளும்
பற்றாமல் அழியுதடா – தம்பி
பார்ப்பனியம் ஒழியுதடா..........................
.
.
சூத்திர மடமைகளும்
சூலத்து சூழ்ச்சிகளும்
சுக்குசுக்காய் உடையுதடா – தம்பி
சுடுநெருப்பில் வேகுதடா......................
.
.
சாதிய அடுக்குகளும்
சமயத்தார் துடுக்குகளும்
சந்தி சிரிக்குதடா – தம்பி
சாஸ்த்திரம் வெளுக்குதடா..................
.
.
ஈவேரா இல்லாட்டி
ஈஎறும்பாய் இருந்திருப்போம்
இழிவு தொலையுதடா – தம்பி
இருட்டு துலங்குதடா.................
.
.
இந்த
தாடிகிழவன் மட்டும்
தமிழ்நாட்டில் பிறக்கலையேல்
தமிழர்கள் ஏதடா – தம்பி
தலைவர்கள் ஏதடா..........................
.
.
இவண்;
சடையன் பெயரன்,
இராசேந்திரப்பட்டிணம்,
விருத்தாச்சலம் வட்டம்,
தமிழ்நாடு.

No comments:

Post a Comment

சடையன் பெயர்