Wednesday 24 June 2015


பிள்ளை பாசம்


பிள்ளை பாசம் 

உன்
பசியினை போக்க=நான்
பச்சையம் வாங்குவேன்...தமிழ்
ருசியினை சேர்த்து=உனக்கு
பாலினை ஊட்டுவேன்...

முச்சங்கம்
சென்று வந்து=உன்
மூச்சினை வளர்ப்பேன்...

முப்பாலை
கொண்டு வந்து=உன்
மூலையில் திணிப்பேன்...

கம்பனின்
கவிவாங்கி=உன்
செவியினில் சேர்ப்பேன்...

காலனின்
ஆயுள்பெற்று=உன்
வாழ்வினை வார்ப்பேன்...

பொதியத்தின்
தென்றலைத்தான்=உன்
தேகத்தில் கலப்பேன்....

மின்னல்
ஒளி வாங்கி=உன்
கண்களுக்கு அளிப்பேன்....

மகனே
உன்
ஆசைகளை நிறைவேற்ற=என்
ஆயுளையும் தொலைப்பேன்.!

No comments:

Post a Comment

சடையன் பெயர்