Monday 25 May 2015

நிலவிழந்த வானம்

போதையற்று 
காதல் செய்தேன்... 
கள்ளமற்று 
காதல் விளைத்தேன்... 

உலகமே 
நீயென்று 
உன்னை சுற்றினேன்... 

உயிரிலே 
உன்னை வைத்து 
உடலை போர்த்தினேன்... 

வாழ்கையே 
நீயென்று 
வானம் வாங்கினேன்... 

வார்த்தைகள் 
மொத்தத்திலும் 
உன்னை பேசினேன்.... 

நெஞ்சமே 
நீயென்று 
நேசம் விதைத்தேன்.... 

நேரங்கள் 
அத்தனையும் 
உனக்காய் கழித்தேன்.... 

தாரமே 
நீயென்று 
தாகம் வளர்த்தேன்... 

தானமாய் 
என்னையே 
தாரைவார்த்தேன்..... 

கனவினில் 
கல்யாணம் 
கட்டி முடித்தேன்.... 

கருவறையை 
நான்மாற்றி 
குழந்தை சுமந்தேன்.... 

சுவரெல்லாம் 
உன்பெயரை 
படியச் செய்தேன்.... 

சுகமெல்லாம் 
உனக்குகொடுத்து 
சுமைகள் வாங்கினேன்.... 

நினைவெல்லாம் 
உனைவைத்தே 
நித்தம் வாழ்ந்தேன்... 

நீயின்றி 
இன்று 
நிலவற்ற வானமானேன்.... 


No comments:

Post a Comment

சடையன் பெயர்