Monday 25 May 2015

கொல்லும் என்னவள்.!

 

ஆயுதங்கள் 
இல்லாமல் =என்னை 
அறுத்து போடுகின்றாள்.... 

ஆசைகளை 
சொல்லாமல் =என்னை 
அன்பால் கொல்லுகின்றாள்.... 

இமைகளை 
ஏவிவிட்டு =என்னை 
இம்சைகள் பண்ணுகின்றாள்.. 

இதயத்தில் 
நுழைந்துகொண்டு =என்னை 
இல்லாமல் ஆக்குகின்றாள்... 

கண்களின் 
விழியமர்ந்து =என்னை 
இன்பமாய் உறுத்துகின்றாள்.. 

காதலின் 
மொழிகற்று =என்னை 
பேசாமல் மூடுகின்றாள்... 

இதழ்களின் 
ரேகைகளால் =என் 
வாழ்வினை எழுதுகின்றாள்... 

மச்சத்தை 
மூக்கில்பெற்று =என் 
மறுஜென்மம் கேட்கின்றாள்... 

உச்சத்தில் 
ஏற்றிவிட்டு =என்னை 
உயிருடன் புதைக்கின்றாள்.... 


No comments:

Post a Comment

சடையன் பெயர்