தீயிட்ட குளிர்
ஆத்தோர ஆலமரம்
அதைதாண்டி அத்திமரம்
அத்தானின் பெயரெழுதி =நான்
படிச்ச ஒத்தமரம்....
செங்குத்தா
வளர்ந்த மரம்....
செங்காற்றால்
ஆடும் மரம்....
பெயரெழுதி
வைத்ததினால்,
பெரும் பூக்கள்
பூக்கும் மரம்.....
அத்திபழ
வாசனையே
ஆவல் ஒன்றை
சொல்வாயோ....
அத்தைமகள்
காதலைத்தான் =என்
அத்தானிடம்
சேர்ப்பாயோ....
அத்திபழம்
கொத்திபோகும்
பசுங்கிளியே
செய்வாயா...
என்
மாமன்மனம்
கொத்திவந்து
மடிதனிலே விடுவாயா...
மரக்கிளையில்
விளையாடும்
அனில் குஞ்சே
நீ ஓடு....
அடிக்கிளையில்
நான் பதித்த
அவர்பேரை
நீ சொல்லு.....
மர உச்சி
ஆடுகின்ற
கருங்சிட்டே
பகர்வாயா....
அவர்காணாமல்
கருப்போடும்
என் மேனி
உரைப்பாயா...
இரவுதனில்
அவர்பெயரில்
இளைப்பாரும்
இளங்குளிரே.....
இறஞ்கிவந்து
என்
உடலை
தீயிட்டு மறைவாயா...
அதைதாண்டி அத்திமரம்
அத்தானின் பெயரெழுதி =நான்
படிச்ச ஒத்தமரம்....
செங்குத்தா
வளர்ந்த மரம்....
செங்காற்றால்
ஆடும் மரம்....
பெயரெழுதி
வைத்ததினால்,
பெரும் பூக்கள்
பூக்கும் மரம்.....
அத்திபழ
வாசனையே
ஆவல் ஒன்றை
சொல்வாயோ....
அத்தைமகள்
காதலைத்தான் =என்
அத்தானிடம்
சேர்ப்பாயோ....
அத்திபழம்
கொத்திபோகும்
பசுங்கிளியே
செய்வாயா...
என்
மாமன்மனம்
கொத்திவந்து
மடிதனிலே விடுவாயா...
மரக்கிளையில்
விளையாடும்
அனில் குஞ்சே
நீ ஓடு....
அடிக்கிளையில்
நான் பதித்த
அவர்பேரை
நீ சொல்லு.....
மர உச்சி
ஆடுகின்ற
கருங்சிட்டே
பகர்வாயா....
அவர்காணாமல்
கருப்போடும்
என் மேனி
உரைப்பாயா...
இரவுதனில்
அவர்பெயரில்
இளைப்பாரும்
இளங்குளிரே.....
இறஞ்கிவந்து
என்
உடலை
தீயிட்டு மறைவாயா...
No comments:
Post a Comment
சடையன் பெயர்