Monday 28 October 2019

#சுஜித் #ஆழ்துளை கிணறு

சுஜித் செல்லமே நீமட்டும்
மேலநாடா இருந்திருந்தா
மேலவந்து சேந்திருப்ப

ஆழ்துளை கிணராச்சே
ஆண்டவனே என்னசெய்ய
அரசாங்க பொறுப்பாச்சே
அய்யய்யோ என்னசெய்ய

மூச்சே நிக்குதய்யா
முழுவுசுறும் போகுதய்யா
முழுசா மண்ணுக்குள்ள
மூழ்குனது குழந்தையாச்சே

நாடே கதறுதய்யா
நாலுநாளா பதறுதய்யா
ஊரே அழுவுதய்யா
உன்வுசுற மீட்டெடுக்க

நூறடி ஆழத்துல
காத்தில்லா பொந்துக்குள்ள
உயிர்நெடி யில்லாம
கத்திகத்தி நோகுறீயே

பெத்தவளே பைதச்சு
பெரும்பாடு பட்டபின்னும்
மேலெடுக்க முடியலயே
மெல்ல பொறுத்துக்கய்யா

பெரியவுக சுத்திநின்னு
பெருங்கூச்சல் போட்டபின்னும்,
மேலவந்து சேரலயே
மெதுவாக எழுந்துவாயா

தீபாவளிய மறந்துவிட்டு
தமிழகமே காத்திருக்கு
உன்வலிய சுமந்துகிட்டு
உலகமே பார்த்திருக்கு

மேலநாடா இருந்திருந்தா
மேலவந்து சேந்திருப்ப
மெல்லமெல்ல தூக்கும்வர
மூச்சமிச்சம் வச்சிரய்யா
____________________________
சடையன்பெயரன்
மாவட்ட அமைப்பாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

No comments:

Post a Comment

சடையன் பெயர்