Monday 28 October 2019

#சுஜித் #ஆழ்துளை கிணறு

சுஜித் செல்லமே நீமட்டும்
மேலநாடா இருந்திருந்தா
மேலவந்து சேந்திருப்ப

ஆழ்துளை கிணராச்சே
ஆண்டவனே என்னசெய்ய
அரசாங்க பொறுப்பாச்சே
அய்யய்யோ என்னசெய்ய

மூச்சே நிக்குதய்யா
முழுவுசுறும் போகுதய்யா
முழுசா மண்ணுக்குள்ள
மூழ்குனது குழந்தையாச்சே

நாடே கதறுதய்யா
நாலுநாளா பதறுதய்யா
ஊரே அழுவுதய்யா
உன்வுசுற மீட்டெடுக்க

நூறடி ஆழத்துல
காத்தில்லா பொந்துக்குள்ள
உயிர்நெடி யில்லாம
கத்திகத்தி நோகுறீயே

பெத்தவளே பைதச்சு
பெரும்பாடு பட்டபின்னும்
மேலெடுக்க முடியலயே
மெல்ல பொறுத்துக்கய்யா

பெரியவுக சுத்திநின்னு
பெருங்கூச்சல் போட்டபின்னும்,
மேலவந்து சேரலயே
மெதுவாக எழுந்துவாயா

தீபாவளிய மறந்துவிட்டு
தமிழகமே காத்திருக்கு
உன்வலிய சுமந்துகிட்டு
உலகமே பார்த்திருக்கு

மேலநாடா இருந்திருந்தா
மேலவந்து சேந்திருப்ப
மெல்லமெல்ல தூக்கும்வர
மூச்சமிச்சம் வச்சிரய்யா
____________________________
சடையன்பெயரன்
மாவட்ட அமைப்பாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Sunday 1 November 2015

இட ஒதுக்கீடு வரலாறு: சுதந்திரத்திற்கு முன்பு - தோழர் சுரேஷ் பாகம் 3

இட ஒதுக்கீடு வரலாறு = """சுதந்திரத்திற்கு முன்பு """
=====================================================பாகம்=3
;
சிங்கப்பூர்
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் 
அக்டோபர் மாதம்
நடத்திய நிகழ்வில் (அக்டோபர் - 25 - 2015 ஞாயிறு)
பங்கேற்று
;
இட ஒதுக்கீடு வரலாறு = """சுதந்திரத்திற்கு முன்பு """
என்ற தலைப்பில்
தோழர் சுரேஷ்( எ) சடையன் பெயரன்

உரையாற்றியது.........................

இட ஒதுக்கீடு வரலாறு: சுதந்திரத்திற்கு முன்பு - தோழர் சுரேஷ் பாகம் 2

இட ஒதுக்கீடு வரலாறு = """சுதந்திரத்திற்கு முன்பு """
=====================================================பாகம்=2
;
சிங்கப்பூர்
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் 
அக்டோபர் மாதம்
நடத்திய நிகழ்வில் (அக்டோபர் - 25 - 2015 ஞாயிறு)
பங்கேற்று
;
இட ஒதுக்கீடு வரலாறு = """சுதந்திரத்திற்கு முன்பு """
என்ற தலைப்பில்
தோழர் சுரேஷ்( எ) சடையன் பெயரன்

உரையாற்றியது.........................

இட ஒதுக்கீடு வரலாறு: சுதந்திரத்திற்கு முன்பு - தோழர் சுரேஷ் பாகம் 1

இட ஒதுக்கீடு வரலாறு = """சுதந்திரத்திற்கு முன்பு """
=====================================================பாகம்=1
;
சிங்கப்பூர்
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் 
அக்டோபர் மாதம்
நடத்திய நிகழ்வில் (அக்டோபர் - 25 - 2015 ஞாயிறு)
பங்கேற்று
;
இட ஒதுக்கீடு வரலாறு = """சுதந்திரத்திற்கு முன்பு """
என்ற தலைப்பில்
தோழர் சுரேஷ்( எ) சடையன் பெயரன்
உரையாற்றியது.........................

Monday 5 October 2015

அண்ணனை ஏற்போம் ! அண்ணல்வழி நடப்போம்...........!! =================================================


.
தலித் இளைஞர்கள்
அரசியலுக்கு வரவேண்டும்............
தமிழ்நாட்டு அரசியலை
தனதாக்கி கொள்ளவேண்டும்.................
.
.
விடுதலைச் சிறுத்தைகளின்
போர்ப்படையில் சேரவேண்டும்................
விடியலை உருவாக்கும்
பொற்காலம் மலரவேண்டும்.......................
.
.
சேரிகளின் ஏக்கங்களை
செவிடர்கள் கேட்கவேண்டும்.............
செந்தமிழர் நாட்டினிலே
தொல்தமிழர் ஆளவேண்டும்....................
.
.
எழுச்சி தமிழருக்கு
ஏவுகனை யாகவேண்டும்................
ஏய்க்கும் கூட்டத்திற்கு
எரிமலையாய் பொழியவேண்டும்................
.
.
அங்கீகாரம் பெற்றிடவே
அண்ணனுக்கு உதவவேண்டும்...............
அதிகாரம் அடைந்திடவே
அண்ணல்வழி நடக்கவேண்டும்..................
----------------------------------------------------------------------------
சடையன் பெயரன்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,
இராசேந்திரப்பட்டிணம்.

Sunday 4 October 2015

என் தலைவன் முதல்வரானால்..................


எங்கள் 
சேரிகள்
ஊரையாளும்............
.
செருப்புகள்
எங்கள்
காலில் புழங்கும்.............
.
எங்கள்
பாடைகள்
ஊரின்
தெருவில் பயணிக்கும்.............
.
எங்கள்
கடவுள்
எல்லோராலும் வணங்கப்படுவார்............
.
எங்கள்
காணிக்கைகள்
உண்டியலில் மட்டுமல்ல
உங்கள்
உள்ளத்தில்லும் சேர்த்துகொள்ளப்படும்...............
.
ஆம்!
என்
தலைவன்
முதல்வரானால்..................

Wednesday 30 September 2015


சிறுத்தைகளே
ஊடக களத்தில்
உறக்கம் ஏன்?
=========================================
.
.
சிறுத்தைகளின் ஊடகம்
சிக்கலில் கிடக்கையில்
சிக்கன முறையிலேனும்
சிலவற்றை செய்யலாமே................
.
.
அகரனின் வலையத்தில்
அண்ணனை காணாமல்
அனுதினமும் மனமுடையும்
அவலத்தை கலையலாமே...............
.
.
போராட்ட களத்தையேனும்
பொருப்பேற்று பதிவேற்றி
பொல்லாத அரசியலின்
போல்லாப்பை வெல்லலாமே..............
.
.
தலைவரின் தாகத்தை
தலித்துகள் ஆபத்தை
தவனை முறையிலேனும்
தந்துதவி செய்யலாமே...................
.
.
உண்மையை பேசாத
ஊடக தந்திரத்தை
உறக்கம் கலைந்துவிட்டு
ஊடருக்க முயலலாமே..................
.
.
தாமதமாய் தாமதமாய்
தடுமாறி நாம்நின்றால்
தலைமையின் கடுமுழைப்பு
தண்ணீராய் போயிடுமே.................
.
.
நமக்கென்று இணையத்தில்
நருக்கென்று ஓர்கணக்கு,
அகரன் அன்பளித்த
அழகான தளமிருக்கு...............
.
.
அதிலேனும்
அதிலேனும்
அனுதினமும் வழங்கலாமே........
.
.
அவரேனும்
அவரேனும்
அதில்கவணம் கொள்ளலாமே.............
.
.
சடையன் பெயரன்,
இராசேந்திரப்பட்டிணம்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

Monday 28 September 2015

##‪#‎கூட்டணிக்கு‬ எவருமே அழைக்கவில்லை திருமாவிற்க்கு ஆட்சியில் பங்கு வேண்டுமாம்...##; சீமான்.
.
.
சிந்திக்கட்டும் சீமான்
==========================.
.

.
சிறுத்தைகளைப் பார்த்தா
சீமான்
சிறுத்தைகளைப் பார்த்தா
சீண்டத் துணிந்தாய்..............
.
.
சினிமா மோகத்தில்
நீ
சிக்குண்டு கிடக்கையில்
திருமா மோகத்தில்
திருப்பியடித்து களமாடியவர்கள்
விடுதலைச் சிறுத்தைகள்...........
.
.
விடுதலைப் புலிகள்
களத்தில் இல்லையென்று
உறுதிசெய்துகொண்டு
களத்திற்கு வந்த
கள்ளத் தோணிகள்
நீங்கள்.................
.
.
விடுதலைப் புலிகளின்
விடுதலைக் களத்தினில்
தோளோடு தோள்நின்று
வீரமாய் போரிட்ட
விடுதலைச்
சிறுத்தைகள்
நாங்கள்...................
.
.
சாதியைச் சொன்னால்தான்
உன்னால்
ஊர்தெருவையே
கூட்டமுடியும்....................
.
.
சாதியை ஒழிக்கத்தான்
நாங்கள்
சேரிகளையே
சேர்க்கின்றோம்...................
.
.
என்னைத்தாண்டியா
உனக்கு
வள்ளுவன் பாட்டன்
நீ
வள்ளுவனை பேசுவதே
எங்கள்
வளவனின் கொடையன்றோ.................
.
.
என்னைத்தாண்டியா
உனக்கு
தமிழ்நாடு சொந்தம்
நீ
தமிழனென்று சொல்வதே
எங்கள்
எழுச்சிதமிழர் ஏற்பதாலன்றோ..................
.
.
சேரிகளை திரட்டி
செந்தமிழர் விடுதலைக்கு
களமாடுகின்ற
எங்களைப்பேசுவதற்கு,
செழித்தவர்களை கூட்டி
சேரிகளை செரிக்கின்ற
உனக்கென்ன தகுதியடா..................
.
.
எங்களை
அடக்கி ஒடுக்குகின்ற
இந்துமதவெறிக்கு
இளவலாய் வேலைசெய்யும்
நீயா
எங்களைப்பற்றி பேசுகின்றாய்....................
.
.
சிறுத்தைகளைப் பார்த்தா
சீமான்
சிறுத்தைகளைப் பார்த்தா
சீண்டத் துணிந்தாய்..............
.
.
விளைவுகள்
வேறாய் இருக்கும்
எச்சரிக்கை...............
எச்சரிக்கை.....................
.
.
உன்
தமிழ்தேசியம்
என்
மயிருக்கு
சமம்..............................
.
.
சடையன் பெயரன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
இராசேந்திரப்பட்டிணம்.
எது நவீன இந்தியா?
=========================
.
இந்த நவீன
இந்தியாவில்
ஊழல் இருக்காது=என்று
உரத்து முழங்க முடியமா?
.
.
இந்த நவீன
இந்தியாவில்
மதவெறி எரிக்காது=என்று
மார்தட்டி கூறமுடியுமா?
.
.
இந்த நவீன
இந்தியாவில்
ஏழைகள் சிரிப்பார்கள்=என்று
எத்துனைபேர் எடுத்தியம்புவர்?
.
.
இந்த நவீன
இந்தியாவில்
சேரிகள் இருக்காது=என்று
சேதி சொல்ல முடியமா?
.
.
என் வலிகளும்
என் வேதனைகளும்
என் குமுறல்களும்
என் ஏக்கங்களும்
அப்படியே.........................
அப்படியே............................
அனாதையாய் இருக்கும்போது.
.
.
எப்படி
சொல்கின்றாய்
நவீன
இந்தியா
நவீன
நாடு
என்று..................................
.
.
சடையன் பெயரன்.
**என்னுடைய 2 -வது கவிதை தொகுப்பு நூல் வெளியீடு**
====================================================
.
தலைப்பு;
.
// பெத்தவங்க //
.
என்ற என்னுடைய இந்த கவிதை புத்தகத்தை இணையம் வழியாக வெளியிட்டு இருக்கின்றேன்.
இதனை நீங்கள்
.
.http://freetamilebooks.com/ebooks/pethavanga-kavithaigal/
.
.
என்ற இணையதளத்திற்குச் சென்று இலவசமாக
பதிவிறக்கி படிக்கலாம்.
.
.என்னுடைய முதல் நூல்
.
.//மீண்டும் சந்திப்போமா//-வை படிக்க
.
.http://freetamilebooks.com/ebooks/meendum-sandhippoma/
.
.
நண்பர்கள் படித்துவிட்டு
தங்களுடைய
கருத்துக்களை
பதிவிட வேண்டுகின்றேன்.
.
நன்றி,
சடையன் பெயரன்.